Monday, September 5, 2011

இரு காதலிகளும்... நானும் ...



அவள் வந்ததில் இருந்து
என்னை நீ சரியாக
கவனிப்பதே இல்லை
புலம்புகிறாள் முதல் காதலி ..





இணையத்தில் எப்போதும்
இணைந்திருப்பாய் என்னுடன் ..
இப்போது அவளுடன்
இணைந்திருக்கிறாய்..
 மறந்து விட்டாயா என்னை ..

 உன் கைகள் என்னை
 எப்போதும் வருடி கொண்டே
 இருக்கும் முன்பு ..இப்போது
 அப்படி இல்லை ..

நான் அளவில் சிறியவள்
என்பதால் வெறுக்கிறாயா
 இல்லை   அவள் மோகம்
உன்னை ஆட்டுவிக்கிறதா ..

 எப்படி ஆனாலும் உன்
முதல்   காதலி நான் தான்
 மறந்து  விடாதே !

அவள் அழகி
தான் உன்னை   எப்போதும்
இணையத்தில் இயங்க வைப்பவள் தான்
அதற்காக என்னை மறந்து
விடாதே காதலா !
நான்  உன்னவள்  ...



  கடந்த வாரம் சோனி வயோ லேப்டாப் ஓன்று வாங்கினேன் .அதன் பிறகு செல்போனை அவ்வளவாய் பயன்படுத்துவதில்லை ..இக்கவிதை செல்போன் தன்னை முன்பு போல பயன்படுத்தாதர்க்கு என்னிடம் புலம்புவதாக எனது கற்பனையில் ..